hot sale

Saturday, 17 June 2017

தோசை

தோசையை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்?




தோசை சாப்பிடுவதிலும் சில நன்மைகள் இருக்கின்றன. ஆனால், தினமும் வெறும் அரிசி மாவு தோசையாக மட்டுமின்றி கம்பு, ராகி என வகை வகையான தோசைகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. தோசைக்கு சேர்க்கப்படும் எண்ணெயை குறைத்துக் கொண்டீர்கள் எனில் தோசையும் இட்லியை போல ஓர் சிறந்த காலை உணவு தான்....


உடற்சக்திக்கு நமது உடலுக்கு கார்ப்ஸ் அவசியம் தேவைப்படுகிறது. தோசையில் இது கிடைக்கிறது. ஆனால் தோசையில் சேர்க்கப்படும் அதிகளவு எண்ணெய் உடலுக்கு நல்லதல்ல. தோசையில் இருந்து நமக்கு மினரல்ஸ் மற்றும் வைட்டமின்களும் கூட சிறிதளவு கிடைக்கிறது. தோசைக்கு சாம்பார் பயன்படுத்துவதன் மூலம் புரதம், வைட்டமின், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் நிறையவே கிடைக்கின்றன.

தோசையில் கொழுப்பு குறைவு. இதை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் இதய நலனை பாதுகாக்கலாம். குறிப்பாக எண்ணெய்யை அதிகம் பயன்படுத்த கூடாது. தினமும் அரிசி தோசையை மட்டும் சாப்பிடுவதற்கு பதில் ராகி, கம்பு, சோளம், என எதை வேண்டுமானாலும் இதில் கலந்து தோசையாக சுட்டு சாப்பிடலாம். ராகி, கம்பி போன்றவற்றை வெறுமென சாப்பிட விரும்பாதவர்கள் கூட தோசையில் கலந்து சாப்பிட விரும்புவார்கள். இதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் உள்ளவர்கள், அரிசி மாவு தோசைக்கு பதிலாக ராகி, கம்பு, கோதுமை போன்றவற்றை கலந்து தோசை சாப்பிடலாம். இது உங்கள் உடலில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். முட்டையை வேகவைத்து சாப்பிட பிடிக்காதவர்கள் முட்டை தோசை செய்து சாப்பிடலாம்

Thursday, 13 October 2016

கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும்

உங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய 15 விஷயங்கள்

உப்பு

உப்பு அல்லது சோடியம், இதய நோய்கள் மற்றும் வாதம் ஏற்படும் இடர்பாட்டை அதிகரிக்கும் என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றே. உலகத்தில் உள்ள மற்ற பகுதிகளை விட இந்தியாவில் சராசாரிக்கும் அதிகமான அளவில் உப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி நாம் கூடுதலாக பயன்படுத்தும் உப்பினால், அந்த உணவே நமக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக மாறி வருகிறது.

கைப்பேசிகள்

கைப்பேசியின் பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய கால கட்டத்தில், ரேடியோ அதிர்வெண்களில் கதிரியக்க மாசுக்கள் உள்ளதாக ஆய்வுகள் கூறியுள்ளன. இது சில வகையான புற்றுநோய்களை உண்டாக்கும். அதனால் கைப்பேசிகளை எப்போதும் பேண்ட் பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்கவும். வேண்டுமானால் கைப்பேசிக்கு கதிர்வீச்சு தடுப்பை வாங்கவும். இருப்பினும் இதன் திறனைப் பற்றி விவாதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

உருளைக்கிழங்கு சிப்ஸ்

பொறித்த உருளைக்கிழங்கு சிப்ஸ் குடல், மார்பகம், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களை உண்டாக்கலாம். இதுப்போக சருமத்தில் பாதிப்பு மற்றும் தமனிகளில் அடைப்புகளும் ஏற்படும்.

வெள்ளை பிரட்

பாஸ்தாவுடன் சேர்த்த வெள்ளை பிரட் மற்றும் செறிவூட்டப்பட்ட கோதுமை மாவால் செய்யப்பட்ட எந்த ஒரு உணவானாலும் சரி, இரத்தக் கொதிப்பை அவைகள் அதிகரிக்கும். காலப்போக்கில் டைப் 2 சர்க்கரை நோய், இதய குழலிய நோய்கள் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். நல்லது என நினைக்கும் விஷயமெல்லாம் கெட்டதாக உள்ளதல்லவா?

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் உள்ள கசப்புத் தன்மைக்கு காரணம் அதிலுள்ள குகுர்பிடசின்ஸ் எனப்படும் நச்சுப் பொருளாகும். வெள்ளரிக்காயின் இரு பக்க நுனிகளை வெட்டுவதால், வெள்ளரிக்காயின் மற்ற பகுதி குகுர்பிடசின்ஸால் விஷமாக்கப்படுவது குறையும். அதை அப்படியே சாப்பிடுவதால் அனைத்து வகையான வயிற்று புழுக்கள் மற்றும் சுகவீனங்களும் ஏற்படும்.

உட்கார்வது

ஆய்வுகளின் படி, ஒரு நாளில் தொடர்ச்சியாக 3 மணிநேரத்திற்கு மேல் அமர்ந்திருந்தால், பெரிய அளவிலான ஆரோக்கிய இடர்பாடுகள் ஏற்படும். உறுப்புகளின் பாதிப்பு, தாமதமாகும் எதிர்வினைகள், தசை சீரழிவு, ஏன் மரணம் ஏற்படக்கூடிய அளவில் பாதிப்புகள் ஏற்படலாம்.

தூக்கம்

அதிகமாக தூங்கினால் உடல் எடை அதிகரிக்கும். தினமும் இரவில் 7-8 மணிநேரம் தூங்குபவர்களை விட, 9 மணிநேரத்திற்கு மேல் தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் இடர்பாடு 41% அதிகமாக உள்ளது என தூக்கத்தைப் பற்றிய ஆய்வுகள் கூறியுள்ளது.

சமையலறை மேடை

சமையலறை கிரானைட் மேடை சராசரி அளவை விட அதிகளவிலான ரேடானை வெளியிடுகிறது. ரேடான் வெளிப்பாடுக்கும் புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பயந்து விடாதீர்கள். இதனால் ஏற்படும் தாக்கத்தினால் நீங்கள் சாவதற்கு 100 வருடங்கள் ஆகும். அதனால் இது மிகவும் மெதுவாக கொல்லும் விஷயங்களில் ஒன்றாகும்.

சோடா பானங்கள்

குளிர் பானத்தில் அனைத்து விதமான செயற்கை உணவு சாயங்களும், பதப்பொருட்களும் (BVO - ப்ராமினேட்டட் வெஜிடபிள் ஆயில் போன்றவைகள்) உள்ளது. இது உங்கள் எடை, பற்கள், சருமம், இரத்தத்தில் உள்ள சர்க்கரை போன்றவைகளுக்கும் ஆபத்தே.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

உங்கள் மனம் விரும்பும் உணவுகளான ஸ்பைசி சலாமி துண்டுகள், காக்டைல் சாசேஜ்கள், பன்றி இறைச்சி போன்றவைகள் அனைத்திலும் பதப்பொருட்கள் மற்றும் சேர்க்கைப் பொருட்கள் அடங்கியுள்ளது. இதய நோய், புற்றுநோய், குழந்தைகளின் கற்கும் திறனில் பாதிப்பு என பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இது காரணமாக உள்ளது.

டூத் பேஸ்ட்

நாம் பயன்படுத்தும் பல டூத் பேஸ்ட்களில் ட்ரைக்ளோசன் எனப்படும் ரசாயனம் இருப்பது சமீபத்தில் தான் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த ரசாயனத்தைப் பற்றி சரியாக தெரியவில்லை என்றாலும் கூட இது நரம்பியல் மற்றும் இதய பிரச்சனைகள் மற்றும் மார்பக புற்றுநோயை உண்டாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஏர் ஃப்ரெஷ்னர்

ஏர் ஃப்ரெஷ்னர் டப்பாவில் அஸ்பர்டேம், நியோடேம் மற்றும் இதர ஆபத்தான ரசாயனங்கள் உள்ளது. இவைகள் இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் இதய குழலிய நோய்கள் என பல விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பச்சைப் பால்

பச்சைப் பாலில் போவைன் க்ரோத் ஹார்மோன் என்ற ரசாயனம் உள்ளது. இது மாடுகளில் பாலின் வரத்தை அதிகரிக்க உதவும் ஒரு ரசாயனம். அடிப்படையில் புற்றுநோய், கீல்வாதம் மற்றும் தீவிரமான மைக்ரைன்களை ஏற்படுத்தும் BGH.

நாப்த்தலின் உருண்டைகள்

நாப்த்தலின் உருண்டைகளில் நச்சுமிக்க ரசாயனங்கள் உள்ளது. குறைந்த அளவில் இருக்கும் போது, மயக்கம் மற்றும் குமட்டல் போன்றவைகளை இது ஏற்படுத்தும். இவைகள் உங்கள் இரத்தத்தில் கலந்து புற்றுநோயை ஏற்படுத்தும் என கருதப்படுவதால் சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

மைக்ரோவேவ் ஓவன்கள்

இவைகள் சமையலில் வேகமான தீர்வுகளை அளித்து வருகிறது. ஆனால் நாம் பார்க்கப் போவது அதிலிருந்து ஏற்படும் கதிர்வீச்சு கசிவை பற்றி. இதனால் பிறப்பு குறைபாடு, புற்றுநோய் மற்றும் வலுவிழந்த நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மைக்ரோவேவ் செய்யப்பட்ட உணவுகள் உங்கள் இரத்த கொதிப்பை அதிகரிக்கும்.

Thursday, 22 September 2016

A/C போட்டு இரவில் தூங்குபவரா நீங்கள்? எச்சரிக்கை!

நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS)(கழுத்து,முழங்கை,முன்கை மணிக்கட்டு,கீழ்முதுகு வலி,முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி),சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது.
இதை வாத நோய்கள் என்பார்கள். பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார்.
நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன். அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.
ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.
ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3 அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXIGEN,02) அளவு குறைந்துவிடும்.
இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார். பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும்.
வேகத்தாலும்(முன்பே சரநூலில் கூறியிருக்கிறேன் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும், தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.
அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது, உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது.
அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது. தண்ணீரில் (H2O) இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது.
இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது. எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்ற அழைக்கப்படுகிறது.
சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.
நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.
மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது. இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.
இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது.
மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.
இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது. மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகிறது. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது.
இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது.

இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விடயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உடல் சங்கேதமும் அதன் பாதிப்புகளும் :-
**************************"***********
**உங்கள் முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- உங்கள் கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.
**உங்களுக்கு வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் --- உங்கள் கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.
**உங்கள் கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் --- உங்களுக்கு ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.
**உங்களது காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் --- உங்களுக்கு காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.
**உங்கள் கைமடிப்பு,கழுத்து மடிப்பு,கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் --- உங்கள் கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.
**உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் --- அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.
**உங்கள் கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்-- - உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.
**உங்கள் முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் --- உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனை குறைக்கவேண்டும் என அர்த்தம்.
**தொடர்ந்து உங்களது முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் --- அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.
**உங்கள் உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு,பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் --- உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்பசையும்  குறைந்துவிட்டது என அர்த்தம்.
**உங்கள் தோள்பட்டை, முதுகுத்தாரை,குதிங்கால் இவற்றில் இருக்கமோ வலியோ வந்தால் --- உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.
**உங்கள் கைவிரல் கண்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் --- இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.

**என்னிடம் இருந்து உங்களுக்கு  மெசேஜ் வந்தால் - நல்லதை அறிந்து கொள்ளுங்கள் என அர்த்தம்.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலை
கழகத்தில் ஒரு ஆராய்ச்சி செய்தார்கள்.
பழையதை வைத்து.முன்தினம் வடித்த
சோறை நீர்விட்டு அதில் தயிரையும்
சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் என்ன பலன்
கிடைக்கும் என்று.
கிடைத்த முடிவுகளை பார்த்து மூக்கின்
மேல் விரலை வைத்துக்கொண்டு
சொன்னார்களாம் தென்னிந்தியர்கள் மனிதர்கள்
அல்ல அவர்கள் தோவர்களாகத்தான் இருக்க
வேண்டும்.
ஏனெனில் அவர்களின் பாரம்பரிய உணவான
இந்த பழையதையும் தயிரையும் உண்டால்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.!
வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.!
உடல் சோர்வை போக்குகிறது.!
உடலில் உள்ள அனுச்சிதைவுகளை
தடுக்கிறது.!
உடல் சூட்டை தணிக்கிறது.!
வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து
வெளியேற்றுகிறது.!
உற்சாகமான மனநிலையை தருகிறது.!
என்று பலவிதமான நன்மைகளை
பட்டியலிட்டனர்.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும்.
நம்மவர்கள் குப்பை உணவான பர்கரையும்
பீட்சாவையும் புரோட்டவையும் தேடி
அலைவது போல உலகமே பழையச்சோறை
தேடி அலைந்தது
HOW to MAKE PALAYA SORU? என்று அமெரிக்கர்கள் இந்திய
நண்பர்களிடமும் இணையத்திலும்
கேள்விகேட்க ஆரம்பித்துவிட்டனர்.
நட்சத்திர ஓட்டல்களிலெல்லாம்
பழையச்சோறை புதிய நவீன உணவு
பட்டியலில் சேர்த்தர்வு விட்டனர்.
ஆனால் இன்றைக்கு நம்மவர்கள்
சளிபிடிக்கும், உடல் குண்டாகி விடும்
என்றெல்லாம் சொல்லி பழையதை பழித்து
வருகிறார்கள்.
அதுபெரிய தவறு வெயில் காலங்களில்
மட்டுமல்ல அனைத்து நாட்களிலும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு
பழையசோறு.!
சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு
மணிநேரம் கழித்து தேவையான அளவு
தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8
மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால்
அமிர்த பானம் தாயரிக்க தேவையான முக்கிய
பொருளான பழையது தயார்.
இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு
மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர்
கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய்
ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக
வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது
உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும்
கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு
பாருங்கள்.
ஆகா.! இதுதான் தேவாமிர்தம் என்பதை
நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.
இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று
நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்
பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள்
தேவர்கள்.!
அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க
கற்றுக்கொடுத்தவர்கள் நம் முன்னோர்