hot sale

Monday, 28 March 2016

ஆப்பிள் வாங்கலாமா

ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker எதற்காக...
apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.
யோசித்தேன் புரியவில்லை. google செய்தேன்.
அதிர்ச்சியாக இருந்தது.
PLU code (price lookup number) இதனை வைத்து நாம்
சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு
மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.
எவ்வாறு அறிவது:
instruments.world

instruments.world

1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி
உரம் கலந்தது...

2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என
ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.

3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என
ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.

இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.

‪#‎பயனுடைய‬ தகவல் என நீங்கள் நினைத்தால் நண்பர்களோடும் பார்த்துக்கொள்ள மறக்காதீர்

கலால் வரி

கலால் வரி

instruments.world
யாரும் நகைகடை அடைப்புக்கு ஆதரவு தரவேண்டாம் ஆதங்கமும் படவேண்டாம் விஷேசம் வைச்சிருக்கோமேன்னு பதறவேண்டாம்
விஷேசம் வைத்திருப்பவர்கள் தயவு செய்து பொருத்து கொள்ளுங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக
இதில் என்ன நாட்டு வளர்ச்சி இருக்கு இது எப்பிடி நாட்டை வளர்க்கும் என்று எண்ணினால் மேலும் படியுங்கள் விவரம் புரியும்

2லட்சதுக்கு மேல் வாங்கினால் பான் கார்டு அவசியம்
அது போக இந்த அரசு போட்ட கலால் வரி அவர்களை கலங்கடித்து உள்ளது
அது எப்பிடி எல்லாதிலும் தான் வரி இருக்கு என்று நினைக்கலாம்
இதுல அவங்களுக்கு என்ன கலக்கம் என்று நினைக்கலாம் நம்மகிட்ட தானே வாங்கி கொடுக்க போறான் என்று நினைக்கிலாம்

நம்மகிட்ட வாங்கி அரசுக்கு வரி கட்டுவதற்க்கு எவனாச்சும் போறாடுவானா யோச்சிபாருங்கள்
விலை கிராம் 3000 வித்தப்பையும் மக்கள் நகை வாங்க தானே செய்தார்கள் இந்த 1% விதத்தால் மக்கள் நகை வாங்குவதை விட்டா விடுவார்கள்

கண்டிப்பாக கிடையாது உண்மையான நோக்கம் வேற

மக்களுக்காகவா இவர்கள் இவ்வளோ ஆதங்கம் அடைகிறார்கள் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் கிடையவே கிடையாது

அப்பறம் எங்கே இருக்கு ஆப்பு எங்கே இவங்களுக்கு வலிக்குது

அதான் கலால் வரி அது என்ன பண்ணும் என்று நினைக்கிறேர்கள்

இதற்க்கு முன் தங்கம் இறக்குமதிக்கு தான் வரி அப்பிடி என்றால் ஓரு கடை காரான் எவ்வாறு இறக்குமதி செய்கிறானோ அதற்க்கு மட்டும் வரி அந்த நகை கடை காரன் எவ்வளோ விற்பனை செய்கிறான் என்று மத்திய அரசுக்கு தெரியாது அது மாநில அரசுக்கு தான் விற்பனை வரி (vat) அவன் எவ்வளோ விற்கிறான் என்று.அந்த விற்பனைக்கு மட்டும் வரி கட்டிருவான் ஆனால் எவ்வாளோ இறக்குமதி செஞ்சான் என்று மாநில அரசுக்கு தெரியாது

இங்கே தான் இப்போது ஆப்பு

ஓரு நகை கடை காரன் 10 கிலோ நகை வாங்கினால் விற்பனையும் 10 கிலோவாக தானே இருக்கனும்
ஆனால் அந்த கடையின் விற்பனை 12 கிலோவாகவோ 15 கிலோவாக இருந்தால் கலால் வரி மூலம் மத்திய அரசுக்கு தெரிந்து விடும் எப்பிடி இறக்குமதி செய்தது 10 கிலோ விற்பனை செய்வது எப்பிடி 15 கிலோவாக வரும் என்று ஆராய்ந்தால் இவனுகளோட புட்டு வெளி வந்திரும்கிற பதற்றம் தான் இவனுங்களுக்கு

என்னது அது முதலாவதாக தேரத்தின் பின்னனி அடிப்படும் நீங்கள் நகைவாங்கும் போது பில்லில் அவன் உங்கள் நகைக்கு உட்டான சேதாரத்தை தனியாக காட்டமாட்டான் உங்கள் நகையின் கிராம்மோடு கூட்டி தான் பில்போடுவான்
எ.டு 10கிராம் சேதாரம் 10% அதாவது 1 கிராம் இதையும் சேர்த்து 10+1=11கிராம் விற்பனை செய்தாக பில் போட்டு அதுக்கு vat போட்டு வாங்கிருவான் மாநில அரசின் தேவையோ என்னா விற்பனை ஆகுதோ அதற்க்கு தான் வரி அவன்களுக்கு அதுநாலே இப்ப வரைக்கும் பிரச்சனை இல்லை

ஆனா கலால் வரி யால் என்னாகும் 11கிராம் விற்பனை என்று பில் அதற்க்கு 1% விதம் கலால் வரி கட்டினாலும் அவன் நமக்கு கொடுத்தது 10 கிராம் மீதி 1 கிராம் அவன்யிடம் தான் இருக்கு இப்பிடியே சேதாரத்தின் தங்கம் அவனிடம் சேர சேர அவன் வாங்கியதிற்க்கு விற்றதிற்க்கும் கடையில் இருக்கும் இருப்புக்கும் சேர்த்தா அவன் வாங்கியதை விட அதிகமாக இருக்கும் அப்போ அரசு அந்த கடையின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க அரசுக்கு உரிமை உண்டு

அடுத்து தங்க கடத்தல் இது தான் இப்ப இவைங்களுக்கு பேர்யிடி
கருப்புபணம் உருவாக்குவதே இவைங்க தான் அதுக்கு உடைந்தயாக போவதும் இவைங்க தான் அதான் இப்ப இவைங்களுக்கு புலியை கரைக்கிறது

தங்கத்தை யாரும் கரைத்து குடித்து விட முடியாது அப்ப கடத்தி வர தங்கம் பிடிபட்டது போக பிடிபாடமல் வருது யார் கைக்கு வரும் இந்த மொடமுழூங்கி நகை கடைகாரர்யிடம் தான் வரும்
இவன் அதற்க்கு 10% இறக்குமதி வரி இல்லாமல் இந்த நகையை கொள்ளை லாபத்திற்க்கு விற்பான்

இப்போ மேற்கூறிய அதே பிரச்சனை தான் இந்த கலால் வரியால் ஓரு நகை கடை காரன் வாங்கியது எவ்வளோ விற்றது எவ்வளோன்னு இப்ப மத்திய அரசின் நேரடி கண் பார்வைக்கு வந்துவிடும் போது இவனால் கடத்தல் தங்கத்தையும் விற்க முடியாது சேதாரத்தில் மிஞ்சிய தங்கத்தையும் விற்க முடியாது

சேதார தங்கத்தை கூட அவன் வாடிக்கையாளர்களுக்கு தரும் நிலை வந்துவிடும் இப்போது நகை கடை காரண்களுக்கு சேதார நகையை விட கடத்தல் தங்கம் வாங்கினால் பிரச்சினை என்பதே அவனுக்கு மிகப்பெரிய அடி

இப்ப தெரியுதா ஏன் இவ்வளோ பெரிய போராட்டம் என்று. please pass as much as you can....

உன்னால் முடியும்

விழுந்தால் அழாதே . . .
எழுந்திரு !

தோற்றால் புலம்பாதே . . .
போராடு !


கிண்டலடித்தால் கலங்காதே . . .
மன்னித்துவிடு !
தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு !

நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி !

ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில் !

நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை !


கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு !

உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு !


கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு !

மொத்தத்தில் நீ பலமாவாய் . . .

சித்தத்தில் நீ பக்குவமாவாய் . . .


உன்னால் முடியும் . . .

உயர முடியும் . . .

உதவ முடியும் . . .

உனக்கு உதவ நீ தான் உண்டு !


உன்னை உயர்த்த நீ தான் . . . நம்பு . .

 உன்னை மாற்ற நீ தான் . . . முடிவெடு . . .

 நீயே பாறை . . .நீயே உளி . . .

நீயே சிற்பி . . .நீயே செதுக்கு . . .

நீயே விதை . . .நீயே விதைப்பாய் . . .

நீயே வளர்வாய் . . .நீயே அனுபவிப்பாய் . . .

நீயே நதி . . . நீயே ஓடு . . .

நீயே வழி . . . நீயே பயணி . . .

நீயே பலம் . . . நீயே சக்தி . . .

நீயே ஜெயிப்பாய் .

பேசி தீருங்கள்

instruments.world
பேசி தீருங்கள்.
         பேசியே வளர்க்காதீர்கள்.

*உரியவர்களிடம் சொல்லுங்கள்.
     ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

*நடப்பதைப் பாருங்கள்.
     நடந்ததைக்        கிளறாதீர்கள்.

*உறுதி காட்டுங்கள்.
  பிடிவாதம் காட்டாதீர்கள்.

*விவரங்கள் சொல்லுங்கள்.
வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.

*தீர்வை விரும்புங்கள்.
தர்க்கம் விரும்பாதீர்கள்.

*விவாதம் செய்யுங்கள்.விவகாரம்
செய்யாதீர்கள்.

*விளக்கம் பெறுங்கள்.
விரோதம் பெறாதீர்கள்.

*பரிசீலனை செய்யுங்கள்.
  பணிந்து போகாதீர்கள்.

*சங்கடமாய் இருந்தாலும்
  சத்தியமே பேசுங்கள்.

*செல்வாக்கு இருந்தாலும்
  சரியானதைச் செய்யுங்கள்.

*எதிர் தரப்பும் பேசட்டும்.
  என்னவென்று கேளுங்கள்.

  எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.

*நேரம் வீணாகாமல்
  விரைவாக முடியுங்கள்.

*தானாய்த்தான் முடியுமென்றால்
வேறு வேலை பாருங்கள்.

*யாரோடும் பகையில்லை என்பது போல் வாழுங்கள்.