hot sale

Thursday, 30 June 2016

திரிபலா

திரிபலா என்றால் என்ன ? அதனால் நமக்கு என்ன பயன் ?
இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும். உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும்.
முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.திரிபலா என்றால் என்ன?
திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.
திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?
திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தி
ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் 'ஆன்டிபாடி' (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்
உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான "கட்டற்ற காரணிகளை" (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.
செரிமானமின்மை
செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.

மலச்சிக்கல்
திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்
வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.
இரத்தசோகைஇரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).
சர்க்கரை நோய்
திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.
உடல்பருமன்
இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.
சருமப் பிரச்சனைகள்இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.
சுவாசக் கோளாறுகள்
சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.
தலைவலி
தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.
புற்று நோய்
புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.
instruments.world

instruments.world

instruments.world

பூண்டின் பயன்கள்

                பூண்டின் பயன்கள்

♈✝♏🍒சமையலுக்கு முக்கியமாக பயன்படுத்தப்படும் பூண்டு பல்வேறு நோய்களை விரட்டும் மருந்தாக செயல்படுகிறது.

♈✝♏🍒பூண்டு இதயநோயுடன் போராடி இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது, மேலும் ஜலதோஷத்தை குணமாக்க உதவி புரிகிறது.

♈✝♏🍒நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறுதுணையாய் நிற்கும் பூண்டு புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது.

♈✝♏🍒இதுமட்டுமல்லாமல் பூண்டு சாப்பிட்ட நான்கு வாரங்களுக்கு பிறகு கொழுப்பின் அளவு 12 சதவீதமாக குறைந்து இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

♈✝♏🍒ரத்தம் உறைந்து ரத்தகட்டிகள் உருவாவதை தடுக்கவும் உதவுகிறது.

பூண்டு குழம்பு
♈✝♏🍒சின்னவெங்காயம், பூண்டு இரண்டையும் தோல் உரித்து முழுதாக வைத்துக் கொள்ள வேண்டும்.

♈✝♏🍒மிளகு, சீரகம், மல்லி ஆகியவற்றை தனித்தனியே எண்ணெய் இல்லாமலும், தேங்காய் வறுக்கும் போது மட்டும் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டுக் கொள்ள வேண்டும்.

♈✝♏🍒வறுத்தவற்றை ஆறவைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

♈✝♏🍒பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்ததும் பூண்டு, சின்ன வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.
♈✝♏🍒நன்கு வதங்கியதும், புளிக்கரைசல், தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ளவற்றை போட்டு கொதிக்க விட வேண்டும்.

♈✝♏🍒நன்கு கொதித்து குழம்பு பதத்திற்கு வந்ததும் இறக்கினால் சுவையான பூண்டு குழம்பு ரெடி!

பூண்டு லேகியம்

♈✝♏🍒பூண்டை ஒரு கிளாஸ் தண்ணீரில் வேகவைக்கவும். நன்கு வெந்தவுடன் பாலை ஊற்றி சிறு தீயில் கொதித்து வற்றவிடவும்.

♈✝♏🍒வெந்தவுடன் கரண்டியால் மசித்து விட்டு பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்கவும். மசிக்காமல் முழுப்பூண்டாகவும் சாப்பிடலாம். இதை இரவில் சாப்பிட்டவுடன் சாப்பிடலாம்.

பூண்டு துவையல்

♈✝♏🍒கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

♈✝♏🍒நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் நைஸாக அரைத்து கொள்ளவும்.

♈✝♏🍒வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்த பின், அரைத்த துவையலில் தாளித்தவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்


சுவையின் தன்மைகள்

Taste
ஒவ்வொரு பொருளையும் அதனதன் சுவை, வீரியம், பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் இனிப்பு, புளிப்பு, உப்பு, கார்ப்பு, கைப்பு, துவர்ப்பு என ஆறு வகையாகப் பிரித்துள்ளனர். அறுசுவையின் பண்புகள் என்ன என்று பார்ப்போம்.
இனிப்புச் சுவையின் தன்மை: மனதிற்கு மகிழ்ச்சி, ஐம்புலன்களுக்கு புத்துணர்ச்சி, உடலுக்கு இலகுத் தன்மை, ஏழு உடற்தாதுக்களுக்கும் ஊட்டம் கொடுத்தல், ஈரத்தன்மை, குளிர்ச்சி, கனம்.

இனிப்பு சுவை மிகுதி: உடல் எடை கூடுதல், தொட்டால் வலி, சோம்பல், அதிகத்தூக்கம், பாரம், பசியின்மை, அபரிதமான தசை வளர்ச்சி.

இனிப்பு சுவை குறைவு: உடல் அசதி, சோர்வு, புலன் உணர்வு குறைதல், ஏழு உடற்கட்டுகள் வன்மை குறைதல்.



புளிப்பு சுவையின் தன்மை: உமிழ்நீர்ச் சுரப்பு அதிகரித்தல், கண், புருவம் சுருங்கல், வாய் சுத்தப்படுதல், சீரணம் அதிகரித்தல், உடல் வலுப்படுதல், உடலில் சிறு வெப்பம், ஈரம்.

புளிப்பு சுவை மிகுதி: தாகம், கபம் நீர்மையாதல், பித்தம் அதிகரித்தல், செந்நீர் அதிகரித்தல், தசை கெடுதல், உடல் வீக்கம்.
புளிப்பு சுவை குறைவு: பித்தம் குறையும், பசியின்மை, வாயில் நீர் ஊறல், மூட்டுவலி, உடல் வறட்சி.



உப்புச் சுவையின் தன்மை: உமிழ்நீர் அதிகம் சுரத்தல், தொண்டை கரகரப்பு, சீரணம் அதிகரித்தல், கபம் சுரத்தல், ஈரத்தன்மை, மிதவெப்பம்.

உப்புச் சுவை மிகுதி: பித்தம் அதிகரித்தல், தாகம், மயக்கம், உடற்சூடு, புண், அரிப்பு, தசை குறைவு, உடலின் பல பாகங்களிலிருந்தும் இரத்தம் வடிதல், விழுங்க முடியாமை, தோலில் சிறுபுண்கள்.

உப்புச் சுவை குறைவு: சுவையின்மை, வாந்தி, செரியாமை.



கார்ப்புச் சுவையின் தன்மை: பசி அதிகரித்தல், வாயில் எரிச்சல், சிறுவெப்பம், வறட்சி.

கார்ப்புச் சுவை மிகுதி: மலட்டுத்தன்மை, இரைப்பைப்புண், மயக்கம், மூச்சடைத்தல், தலை சுற்றல், தொண்டை எரிச்சல், அதிக வெப்பம், தாகம், நடுக்கம், காலில் குத்து வலி.

கார்ப்புச் சுவை குறைவு: பசியின்மை, செரியாமை.


கச‌ப்புச் சுவையின் தன்மைகள்: வாயில் அழுக்கு நீக்குதல், நாக்கு மற்ற சுவைகளை உணர வைத்தல், பசியைத் துரிதப்படுத்துதல், கட்டிகளைப் போக்கல், வறட்சி, குளிர்ச்சி.

கச‌ப்பு சுவை மிகுதி: தடிப்பு, உடற்பருமன், உடற்கட்டுகளை மெலிய வைத்தல், உடல் வன்மை குறைதல், வாய் வறட்சி.

கச‌ப்புச் சுவை குறைவு: மூட்டு வலி, நாவறட்சி, உடல் வறட்சி.



துவர்ப்பு சுவையின் தன்மை: பழுதடைந்த தாதுக்களை நெறிப்படுத்துதல், நாவின் சுவை அரும்புகள் சுருங்கல், மற்ற சுவை உணர்வுகளைத் தடுத்தல்.

துவர்ப்பு சுவை மிகுதி: வாய் வறட்சி, குருதிச் சுற்றோட்டம் பாதிக்கப்படுதல், வயிற்றுப்புசம், வாய்குளறல், சீரணம் பாதிக்கப்படுதல், பக்க வாதம், வலிப்பு, சுளுக்கு.

துவர்ப்புச் சுவை குறைவு: வாயில் நீர் ஊறல், மலம் இளகிச் செல்லல்.
instruments.world