hot sale

Friday, 27 June 2014

யோகாவும் ஆளுமையும்

யோகா என்று பொதுவாகச் சொல்லப்படும் யோகாசனம் நமது அரிய பொக்கிஷங்களில் ஒன்று. இன்று இந்தியாவைவிட யோகப் பயிற்சிகளும் ஆராய்ச்சிகளும் வெளிநாடுகளில்தான் பல மடங்கு நடக்கின்றன.
யோகாவுக்கு வெளிநாடுகள் இப்படிப்பட்ட இடம் தருவதால் பல திறமையான யோகா ஆசிரியர்கள் அங்கு வகுப்பு எடுக்க ஆசைப்படுகிறார்கள். காரணம் அங்குள்ள தேடல், ஆர்வம் மட்டுமல்லாமல் அதற்காக அவர்கள் கொடுக்கும் கட்டணமும் அதிகம்.
யோகாவை (குறிப்பாக ஆசனங்களை) பரவலாகப் பயிற்சி செய்வதோடு, பிற துறைகளிலும் யோகாவுக்கு இடம் அளிக்கப்பட்டுவருகிறது. விளையாட்டு, நடனம், நாடகம், கல்வி, மருத்துவம், வீர விளையாட்டுகள் என்று பல்வேறு துறையினர் யோகாவின் சில அம்சங்களையாவது தங்கள் துறைக்குக் கொண்டுசெல்கின்றனர்.
யோகா, ஆசன, பிராணாயாமத்தைத் துணிக் கயிற்றில் பயிற்சி செய்வது, ஆசனங்களைப் படகுகளில் மேற்கொள்வது, அலுவலக நேரத்தில் உட்கார்ந்தபடியே சிறிது நேரம் செய்வது, ஜிம்னாஸ்டிக் போல் செய்வது, கடும் சூட்டில் பயிற்சி செய்வது, நிர்வாணமாய்ப் பயிற்சியில் ஈடுபடுவது என்று வேறு திசைகளிலும் யோகா விரிந்துகொண்டிருக்கிறது. யோகா எங்கெல்லாம் முறையாக அணுகப்படுகிறதோ, அங்கு அது தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுவதில்லை.
இந்தியாவில் யோகாவைப் பல விதங்களில் அணுகும் போக்கு உள்ளது. ஒரு யோகா முறை சரிவரவில்லை என்றால், வேறொன்று உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கலாம். அதேநேரம் சில அணுகுமுறைகள் பிரச்சினைகளைத் தருவதாகவும் தவறான முறைகளையும் கொண்டிருக்கின்றன. சரியான தயாரிப்பு இல்லாமல் உடலை, உள்ளுறுப்புகளை வருத்தும் போக்கும் இருக்கிறது.
யோகாவை முறையாகப் பயின்று அதை ஆழமாய் உணர்ந்து தெளிவாய் வெளிப்படுத்தியவர்களுள் கிருஷ்ணமாச்சாரியார் மிக முக்கியமானவர். ஒரு நூற்றாண்டு காலம் வாழ்ந்து சென்னையில் மறைந்த அவருக்கு, யோகாவே மூச்சாக இருந்தது. அறிவியல் ரீதியாகப் பார்த்து ஒவ்வொன்றையும் ஏன், எதற்கு என்று அறிந்து பயிற்சியளிக்கிறார்கள் கிருஷ்ணமாச்சார்யா யோக மரபில் வந்தவர்கள். இவர்தான் பெண்களுக்கு யோகா மிகவும் முக்கியம் என்று சொல்லிப் பல பெண் யோகா ஆசிரியர்கள் உருவாகக் காரணமாக இருந்தவர்.
ஒவ்வொரு அசைவையும் மூச்சோடு அணுகும் மரபு கிருஷ்ணமாச்சாரியாவின் மரபு. பயிற்சி முடிவில் பிராணாயாமமும் உண்டு. ஆழமாய் உள்ளுக்குள் அது செய்யும் வேலையைப் போகப்போக உணரலாம்.
இந்த மரபிலே எல்லா வயதினருக்கும் யோகா (ஆசனம், பிராணாயாமம், யோகா தத்துவம், தியானம்) உண்டு. ஆனால் ஒவ்வொரு பிரிவினருக்கும் அணுகுமுறை மாறுபடும். சிறுவர்களுக்கான யோகா அணுகுமுறை அவர்களின் வளர்ச்சித் தேவையை ஒட்டி அமையும். மற்றவர்களுக்குக் காலையில் செய்யும் பயிற்சி ஒரு மாதிரியாகவும் மாலையில் செய்யும் பயிற்சி வேறு மாதிரியாகவும் இருக்கும். நோய் உள்ளவர்களுக்கான அணுகுமுறை முற்றிலும் வேறானது. இது ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அணுகும் தன்மை கொண்டது.
யோகாவும் நோய்களும்
பிரச்சினையை அதிகப்படுத்தாமல் உரிய முறையிலான எளிய பயிற்சிகள் எத்தனையோ ஆண்டுகள் தீராத நோய்களைச் சரிசெய்துள்ளன - கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அறுவை சிகிச்சை என்று முடிவான பின்பு பலர் யோகச் சிகிச்சைக்கு வந்து நலமாய் வாழ்கிறார்கள். தரும் பயிற்சிகள் ஆசனமாக இருக்காது. ஆசனத்தைக் குறிப்பிட்ட நபரின் தேவைக்கு ஏற்ப மாற்றி, அதனோடு உரிய மூச்சைச் சேர்த்துத் தேவைப்பட்டபோது ஒலியையும் கூட்டிச் சரிசெய்யும் நேர்த்தி மிகவும் அரிதானது.
குழுவாகப் பலருக்கு அளிக்கப்படும் ஆசன - பிராணாயாமப் பயிற்சிகளை முறையாக அறிந்து சரியாகச் செய்யும்போது பயிற்சி செய்பவர்கள் நிறைய பலன்களைப் பெற முடிகிறது.
ஒவ்வொரு வகுப்பும் புதிதுபுதிதாக அமைந்து ஈடுபாட்டோடு பயிற்சி செய்யத் தூண்டும்போது பயிற்சியும் சற்று வலுவான மூச்சோடு அமையும்போது, ஒரு சில வகுப்புகளே யோகாவின் வலிமையை உணரச் செய்துவிடும்.
யோகாவும் ஆளுமையும்
உடல், மூச்சைத் தாண்டி மனம், ஆளுமை என்று விரியும் தன்மை யோகாவுக்கு உண்டு. அது யாரிடம் எந்த மாதிரியான பயிற்சிகளை எவ்வளவு நம்பிக்கை, ஈடுபாட்டுடன் செய்கிறார்கள், எவ்வளவு நாள் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமையும். பயிற்சியின் தொடக்கக் கட்டத்தில் மனம் அமைதியாக இருக்கிறது, தூக்கம் நன்றாக உள்ளது, நாள் முழுவதும் செயல்திறனுடன் இருக்கிறேன். உடல் வலி குறைந்துள்ளது, மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பார்கள். அதற்கு மேல் நாடி, நரம்புகள், இதயம், நுரையீரல், குடல், ரத்த ஓட்டம், மூச்சு ஓட்டம் சீரடைவதை அவர்கள் உணரச் சில நாட்கள் ஆகும்.
ஒவ்வொரு ஆசனமும் முதுகெலும்பை மையமிட்டே இருப்பதால் அது ஆரோக்கியம் பெறுகிறது. வயிறும் மார்பும் ஆரோக்கியம் பெறுகின்றன. இப்படிப் பல நிலைகளில் நமக்குக் கிடைக்கும் ஆரோக்கியம் பெரும் வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.
மதமும் யோகாவும்
யோகா மதத்தைப் போதிப்பது எனப் பலர் நினைக்கிறார்கள். யோகாவுக்கும் மதத்துக்கும் சம்பந்தம் கிடையாது. உதாரணமாக, கிருஷ்ணமாச்சாரியா யோக மரபில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் எனப் பலரும் பயில்கிறார்கள். யாரும் எதையும் வலியுறுத்துவதில்லை. எந்தப் பயிற்சியும் யாருடைய மத உணர்வை அல்லது மதம் சாராத உணர்வைத் துளியும் தொந்தரவு செய்வதில்லை.
யோகா என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல. அது மனம், ஆழ்மனம் என ஊடுருவிச் செல்லக்கூடியது. மொத்த வாழ்க்கையையும் ஆரோக்கியமான விதத்தில் மாற்றக்கூடியது. இதன் மூலம் நாள் முழுவதும் புத்துணர்ச்சி, செயல்திறன் ஆகியவை சகஜமாகக் கைவரும். பயிற்சி ஆழமாகவும் தீவிரமாகவும் இருந்தால் வேறு பல விதங்களிலும் அதன் விளைவை உணர முடியும்.
திறந்த மனதோடு யோகாவை முயன்று பாருங்கள். உங்கள் உடல், மனம் ஆரோக்கியமடையலாம். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படலாம்.

இந்தியாவில் யோகா

யோகா என்று பொதுவாகச் சொல்லப்படும் யோகாசனம் நமது அரிய பொக்கிஷங்களில் ஒன்று. இன்று இந்தியாவைவிட யோகப் பயிற்சிகளும் ஆராய்ச்சிகளும் வெளிநாடுகளில்தான் பல மடங்கு நடக்கின்றன.
யோகாவுக்கு வெளிநாடுகள் இப்படிப்பட்ட இடம் தருவதால் பல திறமையான யோகா ஆசிரியர்கள் அங்கு வகுப்பு எடுக்க ஆசைப்படுகிறார்கள். காரணம் அங்குள்ள தேடல், ஆர்வம் மட்டுமல்லாமல் அதற்காக அவர்கள் கொடுக்கும் கட்டணமும் அதிகம்.
யோகாவை (குறிப்பாக ஆசனங்களை) பரவலாகப் பயிற்சி செய்வதோடு, பிற துறைகளிலும் யோகாவுக்கு இடம் அளிக்கப்பட்டுவருகிறது. விளையாட்டு, நடனம், நாடகம், கல்வி, மருத்துவம், வீர விளையாட்டுகள் என்று பல்வேறு துறையினர் யோகாவின் சில அம்சங்களையாவது தங்கள் துறைக்குக் கொண்டுசெல்கின்றனர்.
யோகா, ஆசன, பிராணாயாமத்தைத் துணிக் கயிற்றில் பயிற்சி செய்வது, ஆசனங்களைப் படகுகளில் மேற்கொள்வது, அலுவலக நேரத்தில் உட்கார்ந்தபடியே சிறிது நேரம் செய்வது, ஜிம்னாஸ்டிக் போல் செய்வது, கடும் சூட்டில் பயிற்சி செய்வது, நிர்வாணமாய்ப் பயிற்சியில் ஈடுபடுவது என்று வேறு திசைகளிலும் யோகா விரிந்துகொண்டிருக்கிறது. யோகா எங்கெல்லாம் முறையாக அணுகப்படுகிறதோ, அங்கு அது தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுவதில்லை.
இந்தியாவில் யோகா
இந்தியாவில் யோகாவைப் பல விதங்களில் அணுகும் போக்கு உள்ளது. ஒரு யோகா முறை சரிவரவில்லை என்றால், வேறொன்று உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கலாம். அதேநேரம் சில அணுகுமுறைகள் பிரச்சினைகளைத் தருவதாகவும் தவறான முறைகளையும் கொண்டிருக்கின்றன. சரியான தயாரிப்பு இல்லாமல் உடலை, உள்ளுறுப்புகளை வருத்தும் போக்கும் இருக்கிறது.
யோகாவை முறையாகப் பயின்று அதை ஆழமாய் உணர்ந்து தெளிவாய் வெளிப்படுத்தியவர்களுள் கிருஷ்ணமாச்சாரியார் மிக முக்கியமானவர். ஒரு நூற்றாண்டு காலம் வாழ்ந்து சென்னையில் மறைந்த அவருக்கு, யோகாவே மூச்சாக இருந்தது. அறிவியல் ரீதியாகப் பார்த்து ஒவ்வொன்றையும் ஏன், எதற்கு என்று அறிந்து பயிற்சியளிக்கிறார்கள் கிருஷ்ணமாச்சார்யா யோக மரபில் வந்தவர்கள். இவர்தான் பெண்களுக்கு யோகா மிகவும் முக்கியம் என்று சொல்லிப் பல பெண் யோகா ஆசிரியர்கள் உருவாகக் காரணமாக இருந்தவர்.
ஒவ்வொரு அசைவையும் மூச்சோடு அணுகும் மரபு கிருஷ்ணமாச்சாரியாவின் மரபு. பயிற்சி முடிவில் பிராணாயாமமும் உண்டு. ஆழமாய் உள்ளுக்குள் அது செய்யும் வேலையைப் போகப்போக உணரலாம்.
இந்த மரபிலே எல்லா வயதினருக்கும் யோகா (ஆசனம், பிராணாயாமம், யோகா தத்துவம், தியானம்) உண்டு. ஆனால் ஒவ்வொரு பிரிவினருக்கும் அணுகுமுறை மாறுபடும். சிறுவர்களுக்கான யோகா அணுகுமுறை அவர்களின் வளர்ச்சித் தேவையை ஒட்டி அமையும். மற்றவர்களுக்குக் காலையில் செய்யும் பயிற்சி ஒரு மாதிரியாகவும் மாலையில் செய்யும் பயிற்சி வேறு மாதிரியாகவும் இருக்கும். நோய் உள்ளவர்களுக்கான அணுகுமுறை முற்றிலும் வேறானது. இது ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அணுகும் தன்மை கொண்டது.
யோகாவும் நோய்களும்
பிரச்சினையை அதிகப்படுத்தாமல் உரிய முறையிலான எளிய பயிற்சிகள் எத்தனையோ ஆண்டுகள் தீராத நோய்களைச் சரிசெய்துள்ளன - கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அறுவை சிகிச்சை என்று முடிவான பின்பு பலர் யோகச் சிகிச்சைக்கு வந்து நலமாய் வாழ்கிறார்கள். தரும் பயிற்சிகள் ஆசனமாக இருக்காது. ஆசனத்தைக் குறிப்பிட்ட நபரின் தேவைக்கு ஏற்ப மாற்றி, அதனோடு உரிய மூச்சைச் சேர்த்துத் தேவைப்பட்டபோது ஒலியையும் கூட்டிச் சரிசெய்யும் நேர்த்தி மிகவும் அரிதானது.
குழுவாகப் பலருக்கு அளிக்கப்படும் ஆசன - பிராணாயாமப் பயிற்சிகளை முறையாக அறிந்து சரியாகச் செய்யும்போது பயிற்சி செய்பவர்கள் நிறைய பலன்களைப் பெற முடிகிறது.
ஒவ்வொரு வகுப்பும் புதிதுபுதிதாக அமைந்து ஈடுபாட்டோடு பயிற்சி செய்யத் தூண்டும்போது பயிற்சியும் சற்று வலுவான மூச்சோடு அமையும்போது, ஒரு சில வகுப்புகளே யோகாவின் வலிமையை உணரச் செய்துவிடும்.
யோகாவும் ஆளுமையும்
உடல், மூச்சைத் தாண்டி மனம், ஆளுமை என்று விரியும் தன்மை யோகாவுக்கு உண்டு. அது யாரிடம் எந்த மாதிரியான பயிற்சிகளை எவ்வளவு நம்பிக்கை, ஈடுபாட்டுடன் செய்கிறார்கள், எவ்வளவு நாள் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமையும். பயிற்சியின் தொடக்கக் கட்டத்தில் மனம் அமைதியாக இருக்கிறது, தூக்கம் நன்றாக உள்ளது, நாள் முழுவதும் செயல்திறனுடன் இருக்கிறேன். உடல் வலி குறைந்துள்ளது, மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பார்கள். அதற்கு மேல் நாடி, நரம்புகள், இதயம், நுரையீரல், குடல், ரத்த ஓட்டம், மூச்சு ஓட்டம் சீரடைவதை அவர்கள் உணரச் சில நாட்கள் ஆகும்.
ஒவ்வொரு ஆசனமும் முதுகெலும்பை மையமிட்டே இருப்பதால் அது ஆரோக்கியம் பெறுகிறது. வயிறும் மார்பும் ஆரோக்கியம் பெறுகின்றன. இப்படிப் பல நிலைகளில் நமக்குக் கிடைக்கும் ஆரோக்கியம் பெரும் வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.
மதமும் யோகாவும்
யோகா மதத்தைப் போதிப்பது எனப் பலர் நினைக்கிறார்கள். யோகாவுக்கும் மதத்துக்கும் சம்பந்தம் கிடையாது. உதாரணமாக, கிருஷ்ணமாச்சாரியா யோக மரபில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் எனப் பலரும் பயில்கிறார்கள். யாரும் எதையும் வலியுறுத்துவதில்லை. எந்தப் பயிற்சியும் யாருடைய மத உணர்வை அல்லது மதம் சாராத உணர்வைத் துளியும் தொந்தரவு செய்வதில்லை.
யோகா என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல. அது மனம், ஆழ்மனம் என ஊடுருவிச் செல்லக்கூடியது. மொத்த வாழ்க்கையையும் ஆரோக்கியமான விதத்தில் மாற்றக்கூடியது. இதன் மூலம் நாள் முழுவதும் புத்துணர்ச்சி, செயல்திறன் ஆகியவை சகஜமாகக் கைவரும். பயிற்சி ஆழமாகவும் தீவிரமாகவும் இருந்தால் வேறு பல விதங்களிலும் அதன் விளைவை உணர முடியும்.
திறந்த மனதோடு யோகாவை முயன்று பாருங்கள். உங்கள் உடல், மனம் ஆரோக்கியமடையலாம். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படலாம்.

ஆயுர்வேதம்

ஆயுர்வேதம் (ஆயுள் வேதம்) என்பது நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவங்களுள் ஒன்று. ஆயுள் என்ற சொல்லுக்கு வாழ்க்கை என்றும், வேதம் என்ற சொல்லுக்கு அறிவு (மெய்ஞானம்) என்றும் பொருள். ஆயுர்வேதம் என்றால் வாழ்க்கையைப் பற்றிய மெய்யறிவு என்று பொருள்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இமயமலையில் பரத்வாஜர் தலைமையில் ரிஷிகள் ஒன்றுகூடி, மக்களின் நோய்களைத் தீர்க்க ஆலோசனை நடத்தினர். பரத்வாஜரின் முக்கிய சீடர் ஆத்ரேயர். ஆத்ரேயருக்கு ஆறு சிஷ்யர்கள் இருந்தனர். அதில் முக்கியமானவர் அக்னிவேசர். அக்னிவேசரின் காலம் கி.மு. 7-ம் நூற்றாண்டு. இவர் அக்னிவேச ஸம்ஹிதை என்னும் நூலை எழுதினார். அதைச் சரகர் தொகுத்துச் சரக ஸம்ஹிதை என்று பெயரிட்டார் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டு). இது ஆயுர்வேதத்தின் முக்கிய நூலாகக் கருதப்படுகிறது. அதேபோல் தன்வந்திரியின் முக்கிய மாணவரான சுஷ்ருதர் அறுவை சிகிச்சையைப் பிரதானமாகக் கொண்டு சுஷ்ருத ஸம்ஹிதை என்னும் நூலை எழுதினார் (கி.மு. 500). பின்னர் நோயைக் கண்டுபிடிப்பதற்கான மாதவ நிதானம் (கி.பி. 7-ம் நூற்றாண்டுக்குப் பின்) என்னும் நூல் எழுதப்பட்டது. மருந்துகளின் செய்முறை விளக்கத்துக்காகச் சாரங்கதர ஸம்ஹிதை என்னும் நூல் 13-ம் நூற்றாண்டில் சாரங்கதரர் என்பவரால் எழுதப்பட்டது.
கிரேக்கம் சென்றது
மாவீரன் அலெக்சாண்டர் கி.மு. 326-ல் வடஇந்தியாவுக்குப் படை எடுத்தார். அதற்கு முன்பே இந்திய மருத்துவ அறிவு கிரேக்க நாட்டுக்குச் சென்றிருக்கலாம். ஆனால், இந்தப் படையெடுப்பின் மூலம்தான் இரு நாடுகள் இடையே கலாசார இணைப்பு ஏற்பட்டதாகக் குறிப்புகள் கிடைக்கின்றன. இங்கிருந்த ஆயுர்வேத மருத்துவர்களின் திறமையைக் கண்டு வியந்த அலெக்சாண்டர், விஷம் சம்பந்தப்பட்ட எல்லா நோய்களையும் அவர்கள்தான் கவனிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். தன் நாட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது சில மருத்துவர்களையும் அழைத்துச் சென்றார்.
கடந்து வந்த பாதை
மகத மன்னனான பிம்பிசாரரின் அரசவை மருத்துவர் ஜீவகர். கௌதமப் புத்தர், அவரது சீடர்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக நியமிக்கப்பட்டவர். ஜீவகர் மேற்கொண்ட அற்புதச் சிகிச்சைகள் பற்றி பல கதைகள் உண்டு.
கல்வி மையமாக விளங்கிய தட்சசீலத்தில் ஏழு ஆண்டுகளுக்கு அவர் கற்றார். அதற்குப் பின் ஒரு நாள், ஜீவகரிடம் அவருடைய குரு ஒரு மண்வெட்டியைக் கொடுத்து, அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு மைல் சுற்றளவில் மருந்துக்குப் பயன்படாத ஏதாவது ஒரு செடி இருக்கிறதா என்று தேடிக்கொண்டு வரும்படி கூறினார். இது அவரது இறுதி பரீட்சையின் ஒரு பகுதி. ஜீவகர் சுற்றிப் பார்த்துவிட்டு மருந்துக்குப் பயன்படாத செடி எதுவுமே இல்லை என்று தெரிவித்தார். பரீட்சையில் அவர் தேறிவிட்டதாகக் குரு கூறினார். மருந்துக்குப் பயன்படாத எந்தப் பொருளுமே உலகில் இல்லை என்று ஆயுர்வேதம் திடமாக நம்புகிறது.
அறிவின் அனைத்துத் துறைகளையும் ஆதரித்த புத்தப் பிட்சுகள் பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கினர். அவற்றில் மருத்துவமும் இடம்பெற்றிருந்தது. இதில் குறிப்பிடத்தக்கது பிகாரில் இருந்த நாளந்தா பல்கலைக்கழகம். இது கி.பி. நான்காம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டுப் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை செயல்பட்டது.
யுனானியும் ஆயுர்வேதமும் நெருங்கிய தொடர்புடையவை. முஸ்லிம் மன்னர்கள் யுனானி முறையை ஆதரித்தாலும், ஆயுர்வேதமும் தழைக்கத்தான் செய்தது. பதிமூன்று, பதினான்காம் நூற்றாண்டில் சாரங்கதர ஸம்ஹிதை என்ற நூல் எழுதப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் இந்திய மருத்துவ முறைகள் அனைத்தையும் தொகுக்கும்படி அக்பர் ஆணையிட்டார். அவருடைய நிதி மந்திரி ராஜா தோடர்மால் இதற்கு உதவியாக இருந்தார்.
மருத்துவ முன்னோடி
1835-க்கு முன் மேல்நாட்டு மருத்துவர்களும் இந்திய வைத்தியர்களும் தத்தம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அதன் பின்னர் மேனாட்டு வைத்தியம்தான் பயன்படுத்தவேண்டும் என்று சட்டம் வந்தது. இந்திய வைத்தியம் ஆதரவிழந்தது. அனுபவமிக்க வைத்தியர்கள் தங்கள் அறிவைப் பிறருக்கு வழங்க வாய்ப்பில்லாமல் மறைத்துவிடவே, தொடர்ந்து பல வருடங்களில் வளம்மிக்க அனுபவ அறிவு மறைந்துவிட்டது.
சுஷ்ருத ஸம்ஹிதையில் காணப்படும் ஒரு அறுவை சிகிச்சை முறையே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தோன்ற அஸ்திவாரமாக அமைந்தது. உலகம் முழுவதும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் தந்தை என்று சுஷ்ருதர் போற்றப்படுகிறார். 18-ம் நூற்றாண்டின் இறுதிவரை ஆயுர்வேத வைத்தியர்கள் கண்புரை சிகிச்சை, பித்தப்பை கல் அகற்றுதல் போன்றவற்றைச் செய்துவந்திருக்கிறார்கள்.
ஆயுர்வேதத்தை நிறைய மாற்றங்கள் நவீனப்படுத்தியிருந்தாலும் அதன் பழைய நூல்கள்தான் இப்போதும் வழிகாட்டுகின்றன. எது ஆயுர்வேதம், எது ஆயுர்வேதம் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.
மாதவர் நோயைக் கண்டறிவதில் நிபுணர் என ஒரு பாடல் குறிப்பிடுகிறது. வாக்படர் சூத்திரங்களில் விற்பன்னர். சுஷ்ருதர் உடல் கூற்றை நன்கு அறிந்தவர். உள்ளுக்கு மருந்து கொடுப்பதில் சரகருக்கு இணை யாருமில்லை. வாக்படரின் அஷ்டாங்க ஹிருதயம் என்ற நூல் இன்றைய ஆயுர்வேத மருத்துவர்களிடையே பிரபலமாக உள்ளது. முந்தைய நூல்களின் முக்கிய பகுதிகள் இதில் சுருக்கமாக தரப்பட்டுள்ளன.
நவீன உலகம்
இன்றைக்கு இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட ஆறு மருத்துவ முறைகளில் ஒன்றாக ஆயுர்வேதம் திகழ்கிறது.
இந்திய மக்கள் தெரிந்தோ, தெரியாமலோ தினசரிப் பேசும்போது ஆயுர்வேதச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் வாழும் படிக்காதவர்கூட, தயிர் சாப்பிட்டால் நெஞ்சில் கபம் கட்டும் என்கிறார். நிறைய பேர் வேர்களையும் பச்சிலைகளையும் தினசரிப் பயன்படுத்துகிறார்கள். வெட்டிவேர் உடலின் ‘சூட்டை’த் தணிக்கும், கோடைகாலத்தில் சற்று இதம் அளிக்கும் என்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக மக்கள் வாழ்வில் அது இணைந்துவிட்டது.
எனது 12 வருட காலச் சிகிச்சை அனுபவத்தில் லட்சக்கணக்கான நோயாளிகளைப் பார்த்த நிலையில் அக்யூட் இன்ஃபெக்ஷன், ட்ரோமா போன்றவற்றுக்குச் சரியான சிகிச்சை தர முடிவதில்லை. முற்றிய நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு, காக்காய் வலிப்பு, காசநோய் போன்றவற்றுக்கு ஆங்கில மருந்து சிறந்ததாக இருக்கிறது. பல சந்தர்ப்பங்களில் ஆயுர்வேதம் ‘சப்ளிமெண்ட்’ ஆகப் பல நிலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீரிழிவு நோய் மருந்து எடுக்கிற ஒருவர் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், கருவேப்பிலை, மஞ்சள் போன்றவற்றை எடுக்கும்போது இதன் ரசாயனத் தன்மை (ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் ப்ராப்பர்ட்டி) காரணமாக டயபடிக் ரெட்டினோபதி, நியூரோபதி, வாஸ்குலோபதி தவிர்க்கப்படுகிறது. இனி வரும் காலத்தில் இரண்டில் உள்ள நல்ல விஷயங்களும் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். இவற்றுக்குள் (ட்ரக் இன்டராக் ஷன்) இருக்கிறதா என்பதை எடுத்துச் சொல்ல இரண்டிலும் தேர்ச்சி பெற்ற, அறிவு வாய்ந்த மருத்துவர்கள் உருவாக வேண்டும். முடிந்தவற்றை நன்றாகச் செய்ய வேண்டும். முடியாதவற்றை முடியாது என்று சொல்ல வேண்டும். எந்த மருத்துவத்திலும் குணமடையாதது என்று உண்டு, அந்த உண்மையையும் மக்களிடம் சொல்ல வேண்டும். உங்களுக்குத் தேவையான உச்சி முதல் உள்ளங்கால் வரையுள்ள பொது மருத்துவம் தொடர்பான கேள்விகளை எழுதி அனுப்பலாம். உங்களுக்கு வழிகாட்டவும், என் அனுபவத்தில் கிடைத்த அறிவையும் பகிர்ந்துகொள்ளவும் தயாராக இருக்கிறேன்.

மருத்துவ முறை

மருத்துவம் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது ஆங்கில மருத்துவம்தான். சுமார் இருநூற்றைம்பது ஆண்டு கால வெள்ளையர் ஆட்சி நமக்குத் தந்த சீதனங்களில் இந்த ஆங்கில மருத்துவமும் ஒன்று.
நம்முடைய ஆதி மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், ஆங்கில மருத்துவ முறையை மறுதலித்துப் பிறந்த ஹோமியோபதி மருத்துவம், சீன மருத்துவ முறைகளான அக்குபஞ்சர், அக்குபிரஷர் என்று பல்வேறு மருத்துவ முறைகள் நம்மிடையே இருந்தாலும், மருத்துவம் என்றால் உடனே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது ஆங்கில மருத்துவ முறை மட்டும்தான்.
எதற்கெடுத்தாலும் அலோபதி
ஆங்கில மருத்துவ முறை தவிர்த்த மற்ற மருத்துவ முறைகள் குறித்து கேலியான சிரிப்புடன் ‘நாட்டு வைத்தியம்' என்று பொத்தாம்பொதுவாகப் பெயர் சூட்டித் தரம் தாழ்த்தி மகிழ்கிறார்கள். ஒரு பக்கம் நம்முடைய தாய்மொழியான தமிழையே வாசிக்கவும், எழுதவும் தெரியாமல் பல தலைமுறைகள் வளர்ந்துகொண்டிருப்பதோடு, அதைக் கேவலமாக நினைக்கிற மனோபாவமும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் என்ன நோய் என்றாலும் ஆங்கில மருத்துவத்தை நோக்கி ஓடுவது என்ற சிந்தனை பரவியிருப்பதில் ஆச்சரியமில்லை.
முதலாளித்துவம் வளர்த்தெடுத்த நுகர்வுக் கலாச்சாரத்தில் பொருட்கள், உடைகள், உணவு, நீர், ஆரோக்கியம் எல்லாமே சந்தையில் விற்பனை செய்யப்படுகிற பொருட்கள்தான். கொசுக்களை ஒழிப்பதைவிட கொசுக்களை விரட்டுவதற்கான கொசுக் கொல்லிகளை விற்பனை செய்வதுதான் முதலாளித்துவத்துக்கு உகந்தது. எதில் எதிலெல்லாம் லாபம் சம்பாதிக்க முடியுமோ, அதில் எல்லாம் தன் கைவரிசையைக் காட்டுவதோடு மட்டுமல்ல, அதற்கான நுகர்வோராக நம் மனநிலையை வசியப்படுத்தி மாற்றுவதிலும் கில்லாடிகள்.
மருந்துகளே வாழ்க்கை?
அதனால்தான் இன்று பெரும்பாலான குடும்பங்களில் மருத்துவத்துக்காகத் தங்கள் வருமானத்தில் பாதிக்கு மேல் செலவு செய்ய நேரிடுகிறது. ஒரு தும்மல் போட்டாலும் சரி, ஒரு நாள் தலைவலி, காய்ச்சல் என்றாலும் சரி, மருத்துவமனையை நோக்கிப் படையெடுக்கிறோம்.
அதுவும் குழந்தைகளுக்கு என்றால் கேட்கவே வேண்டாம். மருத்துவரும் ரத்தம், மலம், நீர், எக்ஸ்ரே (இது இப்ப ரொம்ப பழசு), ஸ்கேன் என்று ஏராளமான டெஸ்ட்களை எடுக்கச் சொல்வார். எல்லா டெஸ்ட்களையும் எடுத்த பிறகு அவர் ஒரு முடிவுக்கு வந்து, மருந்துகளை எழுதிக் கொடுப்பார். அத்துடன் எதிர்காலத்தில் இதனால் ஆபத்து அதிகரிக்கும் என்று பயமுறுத்தவும் செய்வார். தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்.
பெற்றோரும் சாதாரணச் சளித் தொந்தரவை “பிள்ளைக்கு பிரைமரி காம்ப்ளக்ஸ்” என்ற ஆங்கில வார்த்தையை உச்சரிப்பதன் மூலம், தாங்கள் குழந்தை மீது கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறார்கள். மருந்து, மாத்திரைகள், டானிக்குகள் (டானிக்குகளின் மீது அப்படி என்ன ஒரு மோகமோ!). ஆனால் உண்மையில் நடப்பதென்ன தெரியுமா?
குழந்தைகளோ, பெரியவர்களோ, நோயால் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் தொடர்ந்து சாப்பிடும் இந்த மருந்து மாத்திரைகளாலும், டானிக்குகளாலும்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்! எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் சரி, தேவைக்கு அதிகமாகத் தொடர்ந்து உட்கொள்ளப்படும் மருந்துகள், நம்முடைய உடலின் நோய்/மருந்து ஏற்கும் திறனை வெகுவாகப் பாதிக்கும்.
அதாவது நம்முடைய உடலின் தற்காப்பு செயல்முறைகளைப் பாதிப்பது மட்டுமல்லாமல் உடலின் முக்கிய உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகம், இதயம் ஆகியவற்றையும் பாதிக்கும். நாளடைவில் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, எல்லாவற்றுக்கும் மருந்துகளைச் சார்ந்தே வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும். அப்படியானால் மருந்துகளே வேண்டாமா?
நோயின் ஆதாரம்
குழந்தைகளின் நோய்களில் பெரும்பாலானவை ஒவ்வாமையால் உருவாகுபவை. அவை: குளிர் அல்லது வெப்ப ஒவ்வாமை, உணவு ஒவ்வாமை, தூசி ஒவ்வாமை, மலச்சிக்கல், மனஅழுத்தம். இவற்றில் பெரும்பாலான ஒவ்வாமைகளைத் தவிர்த்துவிட்டாலே நோய் வராது. ஏனென்றால், ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான உடல், மன அமைப்புடனே பிறக்கின்றன.
அது மட்டுமல்ல ஒவ்வொரு குழந்தையும் வெப்பம் தாங்கிகளாகவோ, குளிர் தாங்கிகளாகவோ, இரண்டையும் தாங்க முடியாதவர்களாகவோ, தங்களுக்கென்று தனித்துவமான வெப்பமானியுடன் பிறந்து வளர்கிறார்கள். வெப்பம் தாங்கிகளுக்குக் குளிர் ஒத்துக்கொள்ளாது, குளிர் தாங்கிகளுக்கு வெப்பம் ஒத்துக்கொள்ளாது, இரண்டுமே ஒத்துக்கொள்ளாத குழந்தைகளும் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு மிதமான வெப்பம் அல்லது குளிர் மட்டுமே ஒத்துக்கொள்ளும். இதற்கு மாறான சீதோஷ்ண நிலைகள் குழந்தையின் உடல்நிலையில் மாறுபாட்டை ஏற்படுத்தும். இவற்றையெல்லாம் பெற்றோர் எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். இதற்குப் பெரிய மருத்துவர்களோ, ஆய்வுகளோ தேவையில்லை.
ஒரு குழந்தைக்கு வெயில் காலத்தில் அதிகமான வியர்க்குருவோ, வேனல்கட்டிகளோ வருமென்றால் அந்தக் குழந்தை வெப்பம் தாங்க முடியாத, குளிர் தாங்கிக் குழந்தையாக இருக்கும்.
அதேபோல ஒரு குழந்தை குளிர்காலத்தில் சளி, இருமல், தும்மல் என்று அதிகமான சளித் தொந்தரவுகளால் சங்கடப்படுமானால் அந்தக் குழந்தை குளிர் தாங்க முடியாததாக, அதாவது வெப்பம் தாங்கியாக இருக்கும். இன்னும் சில குழந்தைகள் வெப்பத்தையும் தாங்காது, குளிரையும் தாங்காது, மிதமான சீதோஷ்ண நிலையில் நன்றாக இருக்கும். மற்றக் காலங்களில் ஏதாவது தொந்தரவுகள் இருந்துகொண்டேயிருக்கும்.
நோயின் தனித்தன்மை
இது எல்லோருக்கும் பொருந்தும். நாம் அனைவருமே தனித்துவமானவர்கள் என்பதால், நம் உடலில் மாற்றம் அல்லது நோய் வந்தால், அதுவும் தனக்கே உரிய தனித்தன்மையுடன் இருக்கும். உதாரணத்துக்கு வெளிக் காற்றில் ஒருவருக்கு இருமல் வராது. ஆனால் வீட்டுக்குள் அதிகமாக வரும்.
இது அந்த நபரின் தனித்தன்மையான இருமல். சிலருக்கு இரவில் மட்டுமே இருமல் வரும். சிலருக்கு இரவோ, பகலோ கீழே தலையைச் சாய்த்தவுடன் வரும். நிமிர்ந்து உட்கார்ந்தால் வராது. சிலருக்குத் தூங்கி எழுந்தவுடன் இருமல் வரும். அதன் பிறகு இருக்காது. ஆனால், நோய் என்னவோ இருமல்தான். ஆனால், ஒவ்வொருவருக்கும் அவரவருக்கே உரிய தனித்தன்மையுடன் அது வெளிப்படுகிறது.
நம்முடைய ஆதி மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோ மருத்துவ முறைகள் இந்தத் தனித்தன்மையைக் கணக்கில் எடுத்துக்கொண்டே நோய்க்கான மருந்தைத் தெரிவு செய்கின்றன. ஆனால், ஆங்கில மருத்துவ முறைக்குத் தனித்துவம் பற்றிக் கவலையில்லை. அது அதன் அடிப்படைத் தத்துவத்திலேயே கிடையாது. எனவே, மேலே சொன்ன அத்தனை வகையான இருமலுக்கும் ஒரே மாதிரியான மருந்துகளையே தரும். இப்படி நோயாளிகளைத் தனித்துவம் மிக்க மனிதர்களாகப் பார்க்காமல் மந்தைகளாகப் பார்த்து மொத்தமாக ஒரே விதமான மருந்துகளைத் தருகிறது அலோபதி. இதனால் ஒவ்வொரு உயிரின் தனித்துவம் மிக்க உடற்செயல்பாட்டியல் மாறுகிறது. அது மட்டுமில்லை. பக்க விளைவுகள் இல்லாத மருந்துகளே ஆங்கில மருத்துவத்தில் கிடையாது.
மருத்துவ வியாபாரம்
சேவையாக இருந்த மருத்துவம் இன்று செல்வம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டதால் மருத்துவர்களும் மருத்துவ அற உணர்வு இல்லாமல், மனிதாபிமானம் இல்லாமல், சக மனிதன் என்ற அனுதாபம் இல்லாமல், பணத்தைக் கறப்பதிலேயே குறியாக இருக்கிற அவல நிலை இருக்கிறது.
இதனால் தேவையில்லாத டெஸ்ட்கள், தேவையில்லாத மருந்துகள், தேவையில்லாத ஊசிகள், தேவையில்லாத டானிக்குகள் என்று நோயாளியின் உயிரோடு விளையாடுகிறார்கள். தாங்கள் பணம் சம்பாதிக்க, நோயாளியின் உயிரைப் பணயம் வைக்கிறார்கள் டாக்டர்கள். இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது.
மருத்துவக் கல்வி தனியார் வசம் போனபிறகு ஒருவர் மருத்துவக் கல்வியை முடிக்கக் கிட்டத்தட்ட இருபது லட்சம் ரூபாய் செலவாகிறது. அவர் படித்து முடித்தவுடன் அதைச் சம்பாதிக்க வேண்டும், அதற்கு மேலும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதன் விளைவாக நோயாளிகளைப் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளிடம் பணயம் வைத்து, தன் வசூல் வேட்டையை நடத்துகிறார். இதுதான் இன்றைய பொதுவான சூழ்நிலை. இதில் விதிவிலக்குகள் இருக்கலாம்.
ஆரோக்கியம் பற்றி, நோய்களைப் பற்றி குறிப்பாக எந்தெந்த நோய்களுக்கு மருந்து சாப்பிடவேண்டும், எது எதற்குத் தேவையில்லை என்று கல்வி கற்கும்போதே கற்பித்திருந்தால், இத்தனை மருந்துக் கடைகளுக்கு நம்மூரில் வேலையிருக்காது.
அத்துடன் நம்முடைய ஆதி மருத்துவ முறைகளை அரசு ஆதரித்து, அந்த மருத்துவ முறைகளைப் பரப்புவதற்கான வழிமுறைகளைச் செய்ய வேண்டும். மக்களும் கடன் வாங்கியாவது ஆங்கில மருத்துவத்தில்தான் சிகிச்சை பெறுவேன் என்ற மந்தை மனோபாவத்தைக் கைவிட்டு, நம்முடைய மருத்துவ முறைகளை நாட வேண்டும்.
நம்முடைய ஆதி மருத்துவ முறைகளில் பக்கவிளைவுகள் கிடையாது. ஒருவருடைய நோயின் தனித்தன்மையைப் பார்த்து மருந்துகள் கொடுக்கப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. மீண்டும் அந்த நோய் வருவதில்லை. ஒப்பீட்டு நோக்கில் ஆங்கில மருத்துவத்தைவிட எளிமையானது. அதிகச் செலவில்லாதது. இத்தனை சாதகங்கள் நம்முடைய மருத்துவ முறைகளில் இருக்கின்றன.
அதற்காக ஆங்கில மருத்துவ முறையே வேண்டாம் என்று சொல்லவில்லை. அறுவை சிகிச்சை, விபத்தில் உயிர்காப்பு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற துறைகளில் ஆங்கில மருத்துவத்தின் பணி அளப்பரியது. ஒருங்கிணைந்த மருத்துவ முறையே இப்போதைய தேவை.
நோயின் தன்மைக்கேற்ப அது சித்தா அல்லது ஆயுர்வேதம் அல்லது யுனானி அல்லது ஹோமியோ அல்லது அக்குபஞ்சர் அல்லது அக்குபிரஷர் அல்லது ஆங்கில மருத்துவ முறையாக இருக்கலாம். இத்தகைய ஒருங்கிணைந்த மருத்துவ முறையே எதிர்காலத்தில் ஒரு வலுவான சமுதாயத்தைக் கட்டமைக்கும்.

1. உணவு, 2. உடை 3. உறவு


இது நமக்கு தேவையா என்று ஒரு நிமிடம் சிந்தியுங்கள்
நாம் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்று தெரியாமல் செய்யும் நமது நிலை:மக்களே நாகரீகம் என்ற பெயரில் நம்மை ஆட்டி படைக்கும் கேடு கெட்ட பழக்கவழக்களிலிருந்து விடுபட ஏன் அக்கறை காட்டவில்லை? அதில் 1. உணவு, 2. உடை 3. உறவு - இம் மூன்றையும் யாரேனும் நல்லது கேட்டது தெரிந்து அதை பின்பற்றி பயனடைந்தது உண்டா? இல்லவே.. இல்லை என்று நம்மீல் பலரும் வருத்தப்படுவதுண்டு.
1. உணவு: இன்றைய இளசுகளிடம் உணவு என்றால் என்ன? அதைப்பற்றி என்ன என்று கேட்டால், உடனே கையில் உள்ள மொபைல் போனில் வளையதளத்தில் தேடுகின்றனர், இன்றைய சூழலில் அவர்களுக்கு தெரிந்த விஷயம் 1. நூடுல்ஸ் 2. ஃப்ரைட் ரைஸ் 3. ஐஸ் க்ரீம் 4.வது - முக்கியமானது சிகெரெட் (புகைபிடிக்கும் பழக்கம்) 5.வது-மிக முக்கியமானது ட்ரிங்க்ஸ் (மது அருந்துதல்) 1-1:- நூடுல்ஸ்: இவ்வகை உணவு நமக்கு ருசி பார்க்கும் திறனை குறைக்கும். இதனால் நாக்கு செத்துவிடும், மேலும் நல்ல ருசியுள்ள நமது நாட்டு உணவு வகைகள் மேல் குறை கூற நாக்கு அடிமை ஆகிவிடும். 1-2:- ஃப்ரைட் ரைஸ்: இவ்வகை உணவு நமக்கு செமிக்கும் திறனை குறைக்கும். 1-3:- ஐஸ் க்ரீம்: இவ்வகை உணவு நமக்கு உணர்ச்சி (காமம்,கோபம்) திறனை அதிகரிக்கும். இதனால் நாம் தப்பு செய்ய 100% வாய்ப்பு உள்ளது. 1-4:- சிகெரெட்: இன்றைய இளசுகள் இதை முழுநேர உணவாகவே உண்ணுகிறார்கள், இதில் ஆண், பெண், மற்றும் குழந்தை (பள்ளி செல்லும் 6 வயதுள்ளவர்கள்) இதனால் நமக்கு கண் எரிச்சல், உடல் துர்நாற்றம், கண் பார்வை மங்குதல் போன்றவை ஏற்படுத்தும். இது போக கோபத்தையும் அதிகரிக்கும். கடைசியாக.............. 1-5:- ட்ரிங்க்ஸ்: (மது அருந்துதல்) இதற்க்கு நான் விளக்கம் சொல்லத்தேவை இல்லை எல்லோரும் நன்கு அறிந்ததே, ஆனால் மிக முக்கியமான ஒன்று சுயஅறிவையும், சுய ஒழுக்கத்தையும் இழக்க வழிவகுக்கும். unavu muraikal
 "norunkath thinraal nooru vayathu" enabthu pazha mozhi naam maari eduthuk kondom,ninaitha neram ellam theeni entru athu appadi alla. vaaikkul sentravattrai parkalal nantraaga norukkath thindru kuzhambakki anuppa vendum jeerana sakthikkum athu elimaiyay irukkum.  "athigam thinru vaazhnthavanum illai,pattini kidanthu sethavanum illai" alavukku minchinal amirthamum nanchaagum,pasiththu pusi enbana arumaiyana pazha mozhikal.
 ovvoru unavu velaikkum piragu 4 mani neram ethaiyum (thanneeraith thavira) saapidamal iruppathu naam jeerana mandalathirku seyyum arun thondaagum.

 kudal suththp padutha pethi mathirai sappiduvathu, alllathu enimaa eduththal  allathu suga pethi legiyam eduththal nalllathu.melum seyarkai unavil sakthi illai(samaithu sappiduvathu) iyarkai unavu oru velaiyavthu eduththuk kolvathu nallathu.

 oru velai unbavan- yogi
 irandu velai unbavan -bogi
 moontru velai unbavan -rogi
 naangu velai unbavan - manithane alla.

 naam eppothum kadai pidika vendiya irandu irnadu mudrai:

 naal - irandu(malam kazhiththal matrum kulithal)
 vaaram - irandu(ennaik kuliyal matrum unnamal iruthal)
 maatham -irandu(udal uravu mattrum pesamal iruthal)
 varudam -irandu (Kudalai suththam seythal)


2. உடை: அதேபோல் இன்றைய இளசுகளிடம் பொதுவாக பெண்களிடம் உடை என்றால் என்ன? அதைப்பற்றி என்ன என்று கேட்டால், உடனே கையில் உள்ள மொபைல் போனில் வளையதளத்தில் தேடி பார்த்த பின்தான் பதில். அதுவும் வாயிருந்து வராது.... மாறாக மொபைல் போனில் காட்டுவார்கள், இன்றைய புது டிசையின் உடையில் பத்து மாதம் சுமந்த குழந்தை முன் தாயே காமத்தை தூண்டக்கூடிய உடையில் வருகிறாள்....ஏன்? எதற்க்கு?..என்ன கண் இருந்தும், ஏன் குருடர்களாக இருக்கிறேர்கள். பெத்த மகனே நாளைக்கு தெருவில் பொரிக்கியாக வளர்ந்து வர ஏன் நீங்களே காரணமாக இருக்கிறீகள்? தயவு செய்து நமது பாரம்பரிய உடைகளை அணியுங்கள். நம் முன்னோர்கள் அதில் பல அற்புத விஷயங்களை கூறி வைத்துள்ளனர். அதை பற்றி தேடுங்கள், அதை பற்றி பேசுங்கள், இதனால் நமக்கு அழகும், அறிவுத்திரனும் அதிகரிக்கும். மேல் நாட்டு மோகத்தால் ஆணும், பெண்ணும் சுய ஒழுக்கத்தை தவற விடாதீர்கள்

3. உறவு: இந்த உறவு மேலே குறிப்பிட்டு இருந்த அந்த இரண்டையும் ஆராய்ந்து நல்லவகைகளை புரிந்து கொண்டாலே இந்த ஆண், பெண்ணுக்கும்மாக உள்ள உறவு மேன்மையடையும். வயது வந்து வளர.. வளர... நல்ல நண்பர்களா உள்ள ஆண், பெண், இருவருக்குமாக உள்ள உறவு அர்த்தமுள்ள காதலாக மாறும். அதனால் குடும்பம் என்னும் உறவு மேன்படும். சமுதாயத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமமாக மதிப்பும், மரியாதையும், நல்ல எண்ணமும் இருவருக்கும் வளரும். நல்ல முன்னேற்றமும் நாம் காணலாம்...