கர்ன பீடாசனம்
ஹலாசனம் செய்த பின்பு இந்த ஆசனத்தைச் செய்யலாம்.
செய்முறை:
1.விரிப்பில் மல்லாந்து படுக்கவும்,கால்களைச் சேர்த்து வைக்கவும்,தலைக்கு மேற்புரம் நன்றாக நீட்டி இருக்குமாறு செய்யவும்.
2.கால்களை மெல்ல உயரே தூக்கவும்.முழங்கால்களை மடக்காமல் தரையிலிருந்து 45 டிகிரீக்குக் கால்கள் சாய்ந்து கொண்டிருக்குமாறு வைக்கவும்.
3.கால்களை 90 டிகிரீக்குக் கொண்டு வரவும்.
4.கால்களைத் தரைக்கு இணையாகக் கொண்டு வரவும்.
5.கால்களைப் பின்புறமாக நீட்டித் தரையைத் தொடவும் கைகள் நீட்டியவாறுத் தரையிலிருக்கட்டும். முகவாய்க் கட்டை நெஞ்சுக் குழியைத் தொட்டுக்கொண்டிருக்கவும்.
6.முழங்கால்களை மடக்கி வலது பக்க முழங்கால் வலது காதில் அழுத்தியும்,இடதுபக்க முழங்கால் இடது காதில் அழுத்தியும் தரையைத் தொட வேண்டும்.
7.கால் விரல்களை நீட்டி வைத்து குதிக் கால்களையும், கால்விரல்களையும் ஒன்றாகச் சேர்த்து கால் விரல்கள் தரையில் படும்படி வைக்கவும்.
பலன்கள் :
1.கால்கள் வலுப்பெறுகின்றன .
2.வயிற்றுத் தசைகள் வலுவடைகின்றன.
3.முதுகு வலி நீங்குகிறது.
No comments:
Post a Comment