hot sale

Thursday, 13 March 2014

தூக்கமின்மை(ஓய்வு இல்லாமை)

தூக்கமின்மை(ஓய்வு இல்லாமை)

       தூக்கம் என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்று.
ஒரு மனிதன் கண்டிப்பாக குறைந்தது 6 - 8 மணி நேரம் உறங்க வேண்டும்.எல்லா உயிரினங்களும் நன்றாக உறங்குகின்றன, மனிதனை தவிர.மனிதர்கள் பணத்திற்காக இரவும் பகலும் பாரது உழைக்கிறார்கள் இதில் தூக்கம் என்ற ஒன்றை மறந்து விடுகிறார்கள்,பின்பு பிரச்சனைகள் வரும் போது கவலை படுகிறார்கள்  தூக்கமின்மையே எல்லா பிரச்சனைகளுக்கும்
காரணமாக உள்ளது.


எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது,முக்கியமா நேரங்களில் சரியான முடிவு எடுக்க முடியாமல் தவிப்பது போன்று பல பிரச்சனைகள் வருகின்றன.
அதில் முக்கியமான பிரச்சனைகள் என்னவென்றால்



1. கவனம் தவறுதல்:
ஒழுங்காக எதையும் படிக்க முடியாமல்,யோசிக்க முடியாமல் ,எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாத நிலமையில் இருப்பர்,எப்போதும் ஒரு குழப்ப நிலையிலே இருப்பர்.இதனால் அதிகமான விபத்துகள்,சண்டைகள்,சச்சரவுகள்,பயப்படுதல்,பொறுமையில்லாமல் தவிப்பது மற்றும் பதறுதல் போன்றவை ஏற்படுகின்றன.

2.உடல் நலக்குறைவு:
தூக்கமின்மையால் இதயம் சம்பந்தமான பல நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன,

இதயக்கோளாறு,இதய துடிப்பில் மாற்றம்,மாரடைப்பு,இரத்த அழுத்தம்,தூக்கமின்மை ,உடல் நடுக்கம் ,அடிக்கடி மயக்கி விழுதல்,ஞாபக மறதி ,அடிக்கடி தலை வலி ஏற்படுதல் போன்ற நோய்களுக்கு ஆளுகின்றார்கள்
 
3.மன அழுத்தம்:
அதிகமான மன அழுத்தத்திற்கு உள்ளாகுபவர்கள் ஒழுங்காக தூங்கதவர்களே.மேலும் இயலாமை,அதிகம் கோபம் கொள்ளுதல்,எதிலும் திருப்தி இல்லாமல் இருப்பது உடலுறவின் இயலாமை போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.

4.முதிய தோற்றம்:
தூங்காமல் இருப்பதால் கருவளையம் ,கண்ணில் எரிச்சல் ,தோல் சுருங்குதல்,மெலிந்த தேகம், முடி உதிர்தல் போன்றவற்றால் அவர்களுடைய உண்மையான உடலழகை இழந்து முதியவர்கள் போல் கட்சியளிப்பர்.





முடிவு:
நன்றாக தூங்குங்கள்,தூக்கம் என்பது ஒரு வர பிரசாதம்,தூக்கம் வராமல் பல பேர் தவிக்கிறார்கள்,அதை போல் நீங்களும் அவதி பட ஆசை படாதீர்கள் ,வாழ்க்கையை வாழ பழகுங்கள்.

No comments:

Post a Comment