hot sale

Thursday, 13 March 2014

சவாசனம்

ஒய்வு கொண்டு அமைதி பெறச் செய்யும் ஆசனங்கள்

சவாசனம்
சவா- இறந்த உடல் 

இந்த ஆசனம் இறந்த உடலை போன்று இருப்பதால் இப்பெயர் பெற்றது.



செய்முறை:
1.மல்லாந்து படுக்கவும்,கைகள் உடலை விட்டுச் சிறிது தள்ளியிருக்க ,உள்ளங்கை மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும்.

பாதங்களை வேண்டுமளவுபிரித்து வைத்து தலை எந்தப்பக்கமும் சாயாமல் நேராக வைத்து சாதாரணமாக சுவாசத்தை கண்களை மூடிக்கொண்டு செய்ய வேண்டும்.

 ௨.இந்த நிலையில் நேரத்திற்கு ஏற்றவாறு ஒருநிமிடம் அல்லது இரண்டு நிமிடமிருக்கவும்.
பலன்கள்:
1.மனதின் இறுக்கமும்,அழுத்தமும் சமன்செய்யப்படுகின்றன.
2.எல்லாத் தசைகளும், மூட்டுகளும் தளர்த்தப் படுகின்றன.
 3.அதிக இரத்த அழுத்தம், மனதாலேற்படும் மனநோய்ப் பிரச்சினைகளை வெகுவாகக் குறைக்கிறது.
4.பொதுவாக உடல்நலனை அதிகரிக்கச் செய்கிறது.

No comments:

Post a Comment