hot sale

Wednesday, 12 March 2014

அர்த்த சிராசனம்


அர்த்த சிராசனம்

செய்முறை:

1.விரிப்பில் மண்டியிட்டு உட்காரவும்.கைவிரல்களைக் கோர்த்து உச்சந்தலையை தரையில் வைக்கவும்.

2.பிடரியில் விரல்கள் ஒட்டியவாறு குனிந்து அமரவும்.

3.வயிறு,இடுப்பு ஆகியவற்றைத் தூக்கி கால்கள் தரையில் படும்படி வைக்கவும்.

4.உடலின் எடை யாவும் தலையிலிருக்க வேண்டும். சாதாரணமாக மூச்சு விட்டு கண்களை மூடி இதே நிலையில் சுமார் ஒரு நிமிடம் இருக்கவும். பின் ஆரம்ப நிலைக்கு வரவும்.


குறிப்பு:


இது சிரசாசனம் செய்யும் முன் செய்யும் ஆசனமாகும்.


பலன்கள்:

1.சிரசாசனம் செய்ய முடியாதவர்களுக்கு இது ஏற்ற ஆசனமாகும்.

2.தலைப் பாகத்துக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

3.கை,கால்கள் வலுவடையும்.

4.வயிற்றுத் தசைகள் வலுப் பெரும்.

No comments:

Post a Comment