சாம கோணாசனம்
செய்முறை:
1.கைகளை பக்கவாட்டில் வைத்து கால்களை இணைத்து வைத்து நிற்கவும்.
2.கைகளை தலைக்கு மேலே உயர்த்தி மணிக்கட்டை மடக்கி விரல்கள் முன்னோக்கி பார்க்கும்படி வைக்க்கவும்.
3.கால்கள் நேராக இருக்க இடுப்பை வளைத்து கைகள் இடுப்பு எல்லாம் நேர்கோட்டில் இருப்பது போல் வைக்கவும்.
4.விரல்களை வளைத்து தரையைப் பார்ப்பது போல் வைக்கவும்.இதே நிலையில் ௫ வினாடிகள் இருந்து பின் மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
5.மூச்சுக் காற்றை கைகளை உயர்த்தும் பொது உள்ளிழுக்கவும்.முன்னால் குனியும் பொது காற்றை வெளிவிடவும். இறுதி நிலையில் கும்பகம்(மூச்சை நிறுத்தவும்) செய்யவும்.
பலன்கள்:
1.உடலுக்கு நல்ல தோரணையைக் கொடுக்கிறது.
2. இடுப்பு வளையும் தன்மை பெறுகிறது.
3.இளம் வயதுக் காரர்களுக்கு ஏற்ற ஆசனமாகும்.
4.முதுகு வலியை போக்குகிறது.
No comments:
Post a Comment